Tuesday, July 1, 2014

Adults 1ly!

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்...



 
கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.

ஆலிவ் எண்ணெய் உபயோகம்

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்த வழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.

அதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும்.

மார்பக பேட்:
மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

 ---------------------------------------------------------------------------------------------------------------


உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். அதனால் சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும். உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேல் செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.

அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவர் மட்டுமல்ல, நம் இந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே... சிந்தித்து செயல்படுங்கள்... ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
 

No comments:

Post a Comment