Tuesday, July 1, 2014

ADULTS ONLY

 களவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்கங்களும்
இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா?


சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.

யுக்தி ஒன்று:

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.

யுக்தி இரண்டு:

தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.

யுக்தி மூன்று;

விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.

யுக்தி நான்கு:

ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.

யுக்தி ஐந்து:

பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட  சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.

யுக்தி ஆறு:

காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும். கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்


------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?



கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது. ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும்.  




எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா?

கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது. அதனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும்.

ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும். ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேர நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள். பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..?


மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவது நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்.

பல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதாகிக் கொள்கிறார்களே? என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினிமாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது. அதையே ஒரு சாதாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலைதான் ஏற்படுகிறது. அதனால் தன உடல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உருதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெண்களிடம் ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள். செக்ஸ் ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.


----------------------------------------------------------------------------------------------------------------------


பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?


ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு  செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்த செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகின்றனர் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்

உச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அணைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் ஆண்களிடம் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். குடும்பம் என்ற பல்கலைகழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத்  தேவையான உச்சகட்டத்தை கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.

ஒவ்வொரு முறை உறவுகொள்ளும் நேரதில்லும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்து செல்வது கடினமாக இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட்டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சுவது போன்ற செயல்களிலும் ஈடுப்பட வேண்டும். ஆண், பெண் இருவரது உடலிலும் இருக்கும் இன்பத்தை பரஸ்பரம் பெற்றுக்கொள்வதில் தவறில்லையே!!!

No comments:

Post a Comment