Monday, June 30, 2014

சித்தர் காடு -63 சித்தர்களின் சங்கம கூடம் ;




ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவம் வளர்த்த குரவர்கள் நால்வர்

1.திருஞான சம்பந்தர்
2.திருநாவுக்கரசர்
3.சுந்தரர் 
4.மாணிக்கவாசகர் 
இவர்கள் சமய குரவர்கள் என அழைக்கபடுகிறார்கள்.
ஒன்பதாம் நூற்றாண்டில் சிவனடியார்கள் நால்வர் 


1. மெய்கண்டார் 

2.அருள்நந்தி சிவம் 
3.உமாபதி சிவாசாரியார் .
4.சிவானந்த சிவாசாரியார் இவர்கள் சந்தான குரவர்கள் என அழைக்கபட்டார்கள்

இவர்களின் வழிவந்த சீர் காளிசிற்றம்பல நாடிகள் எனும் சிவனடியார் பதினான்காம் நூற்றாண்டில் சித்தர்காடு எனும் இவ்விடத்தில் தனது சீடர்கள் 62 அடியார்களோடு சிவயோகத்தில் திளைத்து ஜீவ ஐக்கியம் பெற்ற இடம் இது ..இதனை வெளிப்படுத்தும் விதமாக 62 சீடர்களையும் கோவிலின் வெளி சுவற்றில் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார்கள் ...
 

நாகப்பட்டிணம் மாவட்டம் ..மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இரண்டு இரண்டு கிலோமிட்டர் தொலைவில் உள்ளது சித்தர் காடு- காண கண் கோடி வேண்டும் ..வந்து பாருங்கள் அருமையான அனுபவங்களைப் பெறலாம்..

No comments:

Post a Comment