Saturday, May 23, 2015

அ முதல் ஃ வரை

                                                         


அன்னை முகம் நான் கண்டதில்லை

ஆண்டவனை நான் நேரிலும் பார்ததில்லை

இன்முகத்தோடு நான் இங்கு வாழ்கின்றேன்

ஈன்றவரை நான் மறைக்கவும் இல்லை.... மறக்கவும் இல்லை!

உண்மையைச் சொல்லி நான் வாழ்கிறேன்

உரிமைக்கும் குரல் குடுப்பேன்

உறுதியோடு செயலிலும் நிலைத்திருப்பேன்

ஊமை குயில் பாடுவதும் இல்லை

ஊமை விழிகள் பார்பதும் இல்லை

எறும்பை போல் நானிருக்கிறேன்

ஏணியை போல் மற்றவர்களையும் தாங்கி நிற்கிறேன்

ஐயம் என்பதை நான் அறியேன்

ஓடம் ஏறி பயணம் செய்திருக்கின்றேன்

ஓலை சுவடியும் படித்திருக்கின்றேன்

ஔவை  மொழி கேட்டு வாழ்ந்து வருகிறேன்

எஃகு போல் மன உறுதி கொண்டு இக்கவிதையை முடிக்கிறேன்!!!

         
                                                              நன்றி !!!

                                                                                                 கவிதை : பன்னீர் செல்வம் . G
                                                                                                                     9489940065 , BSNL.

No comments:

Post a Comment