Friday, September 12, 2014

15. அமானுஷ்ய பரிகாரங்கள் - வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும் எளிமையான பரிகாரங்கள்


(1) வேலை தேடி இன்டர்‌வ்யூ செல்லுமுன் ஏதேனும் சிறிதளவு இனிப்புடன் பச்சை ஏலக்காய் சேர்த்து உண்டுவிட்டு ஒரு டம்ப்ளர் மிதமான சூட்டில் நீரை அருந்தி விட்டு செல்ல, காரியம் நிறைவேறும்.

(2) எதையாவது நினைத்து பதட்டமான மன நிலையில் இருந்தால், ஒரு நிமிடம் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசியால் மூச்சு விட்டு, அதை கவனித்து கொண்டிரிப்பின் பதட்டம் மாறி மனம் தெளிவடையும்.

(3) நவ தானியங்களை தினமும் பறவைகளுக்கு உணவிட வேலை செய்பவர்கள் வேலையில் உயர் பதவி, அதிக சம்பளம், மேலதிகாரிகளுடன் இணக்கம் போன்றவற்றை அடையலாம்.
 

(4) வியாபாரம் தொழில் செல்வ நிலை மேலோங்க வியாழக்கிழமைகளில் ஊர வைத்த கருப்பு உளுந்தை தொடர்ந்து 11 வாரங்கள் குரங்குகளுக்கு இட்டு வர, செல்வ நிலை உயரும். மலை பாங்கான கோவில்களில் மற்றும் விலங்கு சரணாலயங்களில் குரங்குகளை காணலாம். தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் முடிந்த வியாழக்கிழமைகளில் எல்லாம் செய்து வந்தாலும் பலன் உண்டு.
 

(5) திருமணம் தாமதம் இல்லாமல் நடக்க, திருமணம் கூடி வரும் வரை, வியாழக்கிழமைகளில் சிறிது ஊறவைத்த நவதானியம்,சிறிது வெல்லம், உருண்டையாக சிறிதளவு மஞ்சள் சேர்த்த ஒரு உருண்டை கோதுமை மாவு பசுக்களுக்கு கொடுத்து வர விரைவில் திருமணம் கூடி வரும்.

No comments:

Post a Comment