Thursday, December 25, 2014

GOLDEN WORDS பொன்மொழிகள்...!! - PART 1




1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும்
உதவி செய்யாது.

7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம் தான் வேண்டும்.

8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை;
இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

11. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான
பசி. ஒரு முறை சுவைக்கப்பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

12. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

13. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

14.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த
செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது..
-------------------------------------------------------------

No comments:

Post a Comment