Thursday, December 4, 2014

Neelakurinji (Strobilanthes kunthiana) நீலகிரியில் என் கண்கவறந்த சங்ககால மலர்கள் நீலக்குறிஞ்சி

 Neelakurinji (Strobilanthes kunthiana) is a shrub that is found in the shola forests of the Western Ghats in South India. Nilgiri Hills, which literally means the blue mountains, got their name from the purplish blue flowers of Neelakurinji that blossoms gregariously only once in 12 years. Paliyan tribal people apparently used it to calculate their age.They once used to cover the Nilgiri Hills and Palani Hills like a carpet during its flowering season. Now plantations and dwellings occupy much of their habitat. Besides the Western Ghats



நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டு்மே பூப்பது குறிஞ்சியின் சிறப்பு. எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" தினையாக குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டும்.கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும்.