Sunday, September 29, 2013

காதலன்

யார் நீ
என் தந்தையாக இருந்திருக்க வேண்டியவனா 
இல்லை...
என்னுடன் பிறந்திருக்க வேண்டியவனா 
இல்லை....
எனக்கு தோள்குடுக்க வேண்டியவனா
இல்லை....
என்னுடன் இருக்கவேண்டியவனா
இல்லை.....
எனக்கு பிறக்க வேண்டியவனா
இதில் எது நீ??????
என் தந்தை போல் தேற்றினாய்
என் உடன்பிறப்பு போல் அக்கறை கொண்டாய்
என் நண்பன் போல் தோள்கொடுத்தாய்
என் கணவன் போல் காயம் ஆற்றினாய்
என் குழந்தை போல் உரிமை கொண்டாய்
என் கஷ்டத்தில் பங்கு கொண்டாய்
என் சந்தோஷத்தில் நீயும் மகிழ்ந்தாய்
என் சோர்வில் நீயும் சோர்வுற்றாய்
என்னை தாய் தாங்குவதை போல் தாங்கினாய்
ஆனால் இன்றுவரை புரியவிலை
நீ யார்???
ஒன்று மட்டும் புரிகிறது
நீ இல்லை என்றால்
நானும் இருந்திருக்க முடியாது
என்ற உண்மையை......

No comments:

Post a Comment