Wednesday, September 25, 2013

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?


In India, especially in Tamil Nadu in southern India sugar and the number of people infected is increasing day by day.

இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி இல்லாததால்  சர்க்கரை நோய் வருவது தவிர்க்க முயாததாகி விட்டது. சர்க்கரை நோய் என்பது ஒரு குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும்போதே மரபணுவின்  மூலமாக தோன்றுகிறது. 

அது 20 அல்லது 30 வயதில் சுற்றுப்புற சூழ்நிலை காரணங்களால் தூண்டப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. சுற்றுப்புற சூழ்நிலை என்பது மனிதன்  நினைத்தால் மாற்றிக் கொள்ள கூடிய ஒன்று ஆகும். சுற்றுப்புறச் சூழ்நிலையை வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் சர்க்கரை  நோயை தவிர்க்கலாம் அல்லது தள்ளி போடலாம். மனிதனின் தோற்றத்துக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் எப்படி ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டோ  அதுபோல் சர்க்கரை நோய்க்கும் வரலாறு உண்டு. 

எகிப்து பிரமிடுகள் மூலம் அழியா புகழ் பெற்றுள்ள எகிப்தியரின் குறிப்புகளில் சர்க்கரை நோய் பற்றி கி.மு.1500ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை  சேர்ந்த சஸ்ருத் என்ற மருத்துவ மேதை சர்க்கரை நோயை மதுமேகம் என தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நோய், சோம்பேறிகளுக்கும் எடை  அதிகமாக இருப்பவர்களுக்கும் அதிகமாக உண்பவர்களுக்கும் இனிப்பு, கொழுப்பு உள்ளவர்களுக்கும் அதிகம் வருகிறது என அதில் கூறியுள்ளார்.

சர்க்கரை நோய் என்றால் என்ன? 


நமக்கு சக்தியை தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரை சத்து. எந்த உணவு சாப்பிட்டாலும் குளுக்கோஸ் இயக்க சக்தியாக மாற்றி ரத்தத்தின்  வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.  ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்து பயன்படுத்தி  கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை. இதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர்(ஹார்மோன்) தேவைப்படுகிறது. 

அதாவது இன்சுலின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி  செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச் சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள் ஆகும். இன்சுலின்  உற்பத்தி உடலில் சீராக நடைபெறும்போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. 

ரத்தத்தில் சர்க்கரை அளவும் 80-120 மில்லி கிராம் அளவுக்குள் இருக்கிறது. ஆனால் இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்போது உடல்  உறுப்புகளின் செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளாமல் உடல் இயக்கத்துக்கு போதிய சக்தி கிடைக்காமல் போகிறது.  அதனால் ரத்தத்தில் சர்க்கரை கூடுகிறது. ரத்த தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும்போது கூடுதல் சர்க்கரையை வெளியேற்றியே ஆக  வேண்டும் என்கிற நிர்ப்பந் தம் ஏற்படுகிறது. 

இந்த பிரச்னையை தடுக்கிறேன் என்று சிறுநீரகம், உடல் தேவைக்கு அதிகமாகவே சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுகிறது.  இந்த நிலை  நீடிக்கும்போது உடலில் பல செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு களைப்பும், அசதியும் அதிக தண்ணீர் தாகமும்  ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதால் நீர் இழப்பு என்பது நீரழிவு நோய் ஆயிற்று.

No comments:

Post a Comment