Monday, September 16, 2013

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு 
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு 
5.கரு நாகம் 
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும். 

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.


பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!
உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,
1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.
மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.
இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.
பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-
கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .
வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.
வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-
இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.
ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.





கால்நடைகளில் பாம்புக்கடியும், நச்சுத்தன்மையும், முதலுதவிகளும்:

கால்நடைகளில் பாம்புக்கடியும், நச்சுத்தன்மையும், முதலுதவிகளும்:

கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாம்பின் விஷம் தீண்டி கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படும். இதனால் கால்நடை வளர்ப்பேருந்து தாங்க முடியாத மனவேதனையும் பொருளாதார இழப்பீடும் ஏற்படுகிறது.

விஷ பாம்புகள்: 1. ராஜநாகம், 2. பங்காரஸ் கட்டுவிரியன், 3. கட்டு விரியனில் இருவகை உண்டு. இவை சாதாரண பங்காரஸ் சீருலஸ் மற்றும் குறுக்கு பட்டைகளைக் கொண்ட பங்காரஸ் பேசியேடஸ் எனப்படுவனவாகும். 4. வைப்பாரா ரஸ்ஸலை - கண்ணாடி விரியன், 5. எக்கிஸ் கேரினேட்டஸ் - சுருட்டை விரியன், 6. குரோட்டலஸ் - கிலுகிலுப்பை பாம்பு போன்ற பாம்புகள் விஷப்பாம்புகளாகும். டயாஸ் என்றழைக்கப்படும் சாரை பாம்பு விஷமற்ற பாம்பாகும்.

பொதுவாக ஆடுகள் காட்டில் மேயும்போது பாம்பினைப் பார்த்துவிட்டால் இரண்டு காதுகளையும் மேலே தூக்கிக்கொண்டு சிறிது அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும். பிறகு இருப்பிடத்தை நோக்கி ஒடிவந்துவிடும். 

நல்லபாம்பு எதிர்க்கும் குணம் கொண்டதன்று. தம்மை சீண்டும்போது பல நேரங்களில் அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவே முயல்கிறது. கால்நடையைத் தாக்கத் தயாராகும்போது இது கீழ்த்தாடையைக் கீழே இறக்கி வாயைத்திறந்து கோரைப் பற்களை நிமிர்த்தி தாக்கி உயிரியின் உடலில் நஞ்சை செலுத்திகொல்கின்றன.

பாம்பின் நஞ்சு: பாம்பின் நஞ்சு இரு வகைப்படும். ஒரு வகை நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு நியூரோ டாக்சின் என்று பெயர். நல்ல பாம்பின் விஷம் இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடையின் உடலில் ஏறியதும் பிரானிக் நரம்பு எனப்படும் உதரவிதான நரம்பினை பாதித்து உதரவிதானத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால் சுவாசம் தடைபட்டு மரணம் சம்பவிக்கிறது. மற்றொரு வகை ரத்த ஓட்டத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு ஹீமோடாக்சின் என்று பெயர். கண்ணாடி விரியன்பாம்பின் நஞ்சு இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடைகளின்உடலில் சென்றதும் ரத்த சிவப்பு அணுக்களும் ரத்த நாளங்களும் சிதைக்கப்படுகிறது. இதனால் ரத்தம் ரத்தநாளங்களை விட்டு வெளியேறி திசுக்களுக்கு இடையில் உறைந்துவிடுகிறது. இதனால் கால்நடையானது மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

1. கடிபட்ட கால்நடையை ஓடவைக்கவோ, விரட்டவோ கூடாது. ஒரு இடத்தில் கட்டி வைத்து அமைதிப்படுத்த வேண்டும்.

2. கால்நடை மருத்துவருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

3. கால்நடையைக் கடித்த பாம்பு எந்த வகையானது என்பதைக் காண நேரிட்டால் கால்நடை மருத்துவரிடம் கூறுவது மிகவும் அவசியமாகும்.

4. பாம்பு கடித்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து சுத்தமான தண்ணீர் மற்றும் கார்பாலிக் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

5. கடிபட்ட இடத்தை கத்தியால் கீறி வாய் வைத்து உறிஞ்சக்கூடாது. ஏனெனில் வாய்ப்பகுதியில் புண் இருந்தால் ஆபத்து நேரிடும். கடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது.

6. கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கயிறை வைத்து கட்டக்கூடாது. அப்படிக் கட்டினால் கடிபட்ட இடத்தில் இருந்து கயிறு கட்டியிருக்கும் இடம் வரை விஷம் தேங்கி அந்தப்பகுதி முழுமையாக அழுகிவிடும். எனவே கயிறை ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாதவாறு கட்டுப்போட வேண்டும். பாம்பினுடைய விஷத்தின் வீரியத்தைப் பொறுத்தே கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

7. கால்நடை மருத்துவர் வந்து கடித்த பாம்பிற்கான விஷமுறிவு மருந்தினை ஊசி மூலம் கால்நடையின் உடலில் செலுத்தும்போதுதான் கால்நடையானது உயிராபத்திலிருந்து மீளும். காலதாமதம் கால்நடையின் உயிருக்கே கேடு விளைவிக்கும்.

8. கால்நடையைக் கடித்தது விஷமற்ற பாம்பு என்று கால்நடை மருத்துவர் மூலம் அறியப்பட்டால் கடித்த இடத்தில் இதர கிருமிகள் உட்புகுந்து பின்னாளில ஏதேனும் கெடுதல் செய்யாமலிருக்க டெட்டனஸ் டாக்ஸைடு தடுப்பூசிப் போடுவது அவசியம்.

கால்நடைப் பண்ணையில் பாம்பு வராமல் தடுப்பது எப்படி?

கால்நடைப் பண்ணையைச் சுற்றி அடர்ந்த புதர்களையும் அடர்ந்த பூச்செடிகளையும் அகற்றுவது மிகவும் அவசியம். எலிகள் தவளை போன்றவற்றின் நடமாட்டத்தைப் பண்ணையில் கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைப் பண்ணைக்கு அருகாமையில் கோழிப்பண்ணை மற்றும் மீன் உள்ள குளங்கள் இருந்தாலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் தென்படும். பாம்புகளின் வாழிடங்களான கரையான்கள் விட்டுச்சென்ற கரையான் புற்றுகள், மரக்குவியல்கள், கற்குவியல்கள் போன்றவை கால்நடைப் பண்ணையின் அருகிலிருந்தால் இவற்றையும் களைய வேண்டும்.

 நன்றி :தினமலர்

கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாம்பின் விஷம் தீண்டி கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படும். இதனால் கால்நடை வளர்ப்பேருந்து தாங்க முடியாத மனவேதனையும் பொருளாதார இழப்பீடும் ஏற்படுகிறது.

விஷ பாம்புகள்: 1. ராஜநாகம், 2. பங்காரஸ் கட்டுவிரியன், 3. கட்டு விரியனில் இருவகை உண்டு. இவை சாதாரண பங்காரஸ் சீருலஸ் மற்றும் குறுக்கு பட்டைகளைக் கொண்ட பங்காரஸ் பேசியேடஸ் எனப்படுவனவாகும். 4. வைப்பாரா ரஸ்ஸலை - கண்ணாடி விரியன், 5. எக்கிஸ் கேரினேட்டஸ் - சுருட்டை விரியன், 6. குரோட்டலஸ் - கிலுகிலுப்பை பாம்பு போன்ற பாம்புகள் விஷப்பாம்புகளாகும். டயாஸ் என்றழைக்கப்படும் சாரை பாம்பு விஷமற்ற பாம்பாகும்.

பொதுவாக ஆடுகள் காட்டில் மேயும்போது பாம்பினைப் பார்த்துவிட்டால் இரண்டு காதுகளையும் மேலே தூக்கிக்கொண்டு சிறிது அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும். பிறகு இருப்பிடத்தை நோக்கி ஒடிவந்துவிடும். 

நல்லபாம்பு எதிர்க்கும் குணம் கொண்டதன்று. தம்மை சீண்டும்போது பல நேரங்களில் அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவே முயல்கிறது. கால்நடையைத் தாக்கத் தயாராகும்போது இது கீழ்த்தாடையைக் கீழே இறக்கி வாயைத்திறந்து கோரைப் பற்களை நிமிர்த்தி தாக்கி உயிரியின் உடலில் நஞ்சை செலுத்திகொல்கின்றன.

பாம்பின் நஞ்சு: பாம்பின் நஞ்சு இரு வகைப்படும். ஒரு வகை நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு நியூரோ டாக்சின் என்று பெயர். நல்ல பாம்பின் விஷம் இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடையின் உடலில் ஏறியதும் பிரானிக் நரம்பு எனப்படும் உதரவிதான நரம்பினை பாதித்து உதரவிதானத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால் சுவாசம் தடைபட்டு மரணம் சம்பவிக்கிறது. மற்றொரு வகை ரத்த ஓட்டத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு ஹீமோடாக்சின் என்று பெயர். கண்ணாடி விரியன்பாம்பின் நஞ்சு இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடைகளின்உடலில் சென்றதும் ரத்த சிவப்பு அணுக்களும் ரத்த நாளங்களும் சிதைக்கப்படுகிறது. இதனால் ரத்தம் ரத்தநாளங்களை விட்டு வெளியேறி திசுக்களுக்கு இடையில் உறைந்துவிடுகிறது. இதனால் கால்நடையானது மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

1. கடிபட்ட கால்நடையை ஓடவைக்கவோ, விரட்டவோ கூடாது. ஒரு இடத்தில் கட்டி வைத்து அமைதிப்படுத்த வேண்டும்.

2. கால்நடை மருத்துவருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

3. கால்நடையைக் கடித்த பாம்பு எந்த வகையானது என்பதைக் காண நேரிட்டால் கால்நடை மருத்துவரிடம் கூறுவது மிகவும் அவசியமாகும்.

4. பாம்பு கடித்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து சுத்தமான தண்ணீர் மற்றும் கார்பாலிக் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

5. கடிபட்ட இடத்தை கத்தியால் கீறி வாய் வைத்து உறிஞ்சக்கூடாது. ஏனெனில் வாய்ப்பகுதியில் புண் இருந்தால் ஆபத்து நேரிடும். கடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது.

6. கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கயிறை வைத்து கட்டக்கூடாது. அப்படிக் கட்டினால் கடிபட்ட இடத்தில் இருந்து கயிறு கட்டியிருக்கும் இடம் வரை விஷம் தேங்கி அந்தப்பகுதி முழுமையாக அழுகிவிடும். எனவே கயிறை ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாதவாறு கட்டுப்போட வேண்டும். பாம்பினுடைய விஷத்தின் வீரியத்தைப் பொறுத்தே கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

7. கால்நடை மருத்துவர் வந்து கடித்த பாம்பிற்கான விஷமுறிவு மருந்தினை ஊசி மூலம் கால்நடையின் உடலில் செலுத்தும்போதுதான் கால்நடையானது உயிராபத்திலிருந்து மீளும். காலதாமதம் கால்நடையின் உயிருக்கே கேடு விளைவிக்கும்.

8. கால்நடையைக் கடித்தது விஷமற்ற பாம்பு என்று கால்நடை மருத்துவர் மூலம் அறியப்பட்டால் கடித்த இடத்தில் இதர கிருமிகள் உட்புகுந்து பின்னாளில ஏதேனும் கெடுதல் செய்யாமலிருக்க டெட்டனஸ் டாக்ஸைடு தடுப்பூசிப் போடுவது அவசியம்.

கால்நடைப் பண்ணையில் பாம்பு வராமல் தடுப்பது எப்படி?

கால்நடைப் பண்ணையைச் சுற்றி அடர்ந்த புதர்களையும் அடர்ந்த பூச்செடிகளையும் அகற்றுவது மிகவும் அவசியம். எலிகள் தவளை போன்றவற்றின் நடமாட்டத்தைப் பண்ணையில் கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைப் பண்ணைக்கு அருகாமையில் கோழிப்பண்ணை மற்றும் மீன் உள்ள குளங்கள் இருந்தாலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் தென்படும். பாம்புகளின் வாழிடங்களான கரையான்கள் விட்டுச்சென்ற கரையான் புற்றுகள், மரக்குவியல்கள், கற்குவியல்கள் போன்றவை கால்நடைப் பண்ணையின் அருகிலிருந்தால் இவற்றையும் களைய வேண்டும்.

No comments:

Post a Comment