Monday, September 16, 2013

தீவன தட்டைப்பயறு பயிரிடும் முறை


*பருவம் : *இறவை ஜூன் – ஜூலை
*உழவு : *நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இருமுறையும் நாட்டுக்கலப்பை கொண்டு
மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
*தொழு உரமிடுதல் : *எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட்
இடவேண்டும்.
*பார் பிடித்தல் : *30 செ.மீ. இடைவெளியில் 6 மீ நீளத்திற்கு பார்பிடிக்க
வேண்டும். பார் பிடிக்காவிட்டால், பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 சதுர
மீட்டருக்கு பாத்திகள் பிடிக்கவேண்டும்.
*உரமிடுதல் : *மண் பரிசோதனைக்கேற்ப உரங்களை இடவேண்டும். மண் பரிசோதனை
செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல்சத்து
இடவேண்டும். இதனை 55:250:33 கிலோ, யூரியா, சூப்பர் பொட்டாஷ் உரங்கள் மூலமாக
இடலாம்.
*விதைப்பு : *3 பாக்கெட்டுகள் [600 கி] ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக்
கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.
*விதை அளவு : *எக்டருக்கு 40 கிலோ இடைவெளி 30 X 15 செ.மீ.
*நீர் மேலாண்மை : *விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது
நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒரு
முறை பாசனம் அளிப்பது சிறந்தது.
*களை நிர்வாகம் : *தேவைப்படும் போது களை எடுக்கவும்.
*பயிர் பாதுகாப்பு : *பொதுவாகத் தேவையில்லை
*அறுவடை : *விதைத்த 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். [50 சதம் பூக்கும்
தருவாயில்]
*தகவல் : *இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல்
புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி:
044-25304000.

No comments:

Post a Comment