Sunday, October 5, 2014

என் குட்டி தேவதைக்கு...




நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
லகுவான இடத்தில் ஒளிந்து
''எப்படியடி தெரிந்தது?'' நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும்
பத்துப்பல் சிரிப்பு...
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
''ஐயோ! தெரியலியே'' தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு...
பஞ்சப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும்
உன் துறுதுறு குறும்பு..
இப்படி ஒன்றும் தெரியாதவளாய் நான்
நடிப்பதெல்லாம் - உன்னை
எல்லாம் தெரிந்தவளாய் ஆக்கத்தான்
என் குட்டி தேவதையே!

- லதா பிரபாகர்

No comments:

Post a Comment