Monday, September 16, 2013

சாணம் மற்றும் கோமியம்

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன .
அவை சாணம் மற்றும் கோமியம் .
நாம் செய்ய வேண்டியது ...
1) சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்து கொடுப்பது ( சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும் )
2) சாணமும் கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்குமாறு செய்யவேண்டும்
3)கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து பிரித்து எடுத்து கொண்டு பஞ்ச காவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம் .
4) சாணத்தை கோபர் gas தயாரிக்க பயன்படுத்தவும் . ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் . அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும் .
5) கோபர் gas தயாரித்த பின் , மிச்சம் உள்ள sludge ஐ மண்புழு உரம் தயாரிக்க பயன் படுத்தவும் .
6) கோபர் gas தயாரிக்க பயன்படுத்தப்படும் tank இல் பழைய காப்பர் wire மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும் . sludge ஐ மண்புழு உறதிர்க்காக எடுத்த வுடன் மீதமிருக்கும் slurry யை தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு அனுப்பவும் . ( மினரல் குறைபாட்டால் தான் மாடுகள் சினைபிடிப்பில் கோளாறுகள் வருகின்றன , அதை இப்படி செய்வதன் மூலம் தவிர்க்கலாம் ).
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் , பஞ்ச காவ்யா , மூலிகை பூச்சி விரட்டி , மண்புழு உரம் , கோபர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்ற வற்றை பெறுவதால் நீங்கள் பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயன் அடையாலாம் .

No comments:

Post a Comment